தினசரி பூஜை – 16

க⁴ண்டா பூஜா
மணியை சந்தனம் இட்டு, பூ சாற்றி, மணி அடித்து சப்தம் செய்க.
ஸ்லோகம்:

ஆக³மார்த²ம்ʼ து தே³வானாம்ʼ க³மனார்த²ம்ʼ ச ரக்ஷஸாம் |
குரு க⁴ண்டே வரம்ʼ நாத³ம்ʼ தே³வதாஸ்தா²னஸம்ʼனிதௌ⁴ ||

தேவர்கள் வரவும், ராக்‌ஷசர்கள் செல்லவும், மணி ஓசை எழுப்புவோம்; தேவர்கள் இங்கு இருக்கவும்.

ஆத்ம பூஜா:
தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³வ: ஸனாதன​: |த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ(அ)ஹம்ʼ பா⁴வேன பூஜயேத் ||

பொருள்: தேஹமே தேவாலயம்; ஜீவனே அனாதி தெய்வம்; அஞ்ஞானமாகிய நிர்மால்யத்தை (வாடிய பூவை) அகற்றி “ நானே அவன்” என்ற பாவனையுடன் பூஜிக்கவும்.
இப்படி சொல்லி மங்களாக்‌ஷதையை தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டும்.

பீட² பூஜா:

அடுத்து ஸ்வாமியை வைக்கப்போகும் பீடத்துக்கு பூஜை. அக்‌ஷதை அல்லது பூக்களை பயன்படுத்தலாம்.

ஓம் ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம​:|
ஆதா³ர ஶக்த்யை நம​:| மூலப்ரக்ருʼத்²யை நம​: ஆதி³ வராஹாய நம​: ஆதி³ கூர்மாய நம​:
அனந்தாய நம​: ப்ருʼதி²வ்யை நம​:
ஆதி³த்யாதி நவ க்³ரஹ தே³வதாப்⁴யோ நம​:
த³ஶ தி³க்³பாலேப்⁴யோ நம​:


கு³ரு த்⁴யானம்ʼ :

கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணூ​: கு³ருர்தே³வோ மஹேஶ்வர​: | கு³ரு​: ஸாக்ஷாத் பரப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம​:

பொருள்: குருவே ப்ரம்ஹா, விஷ்ணு, மஹேஶ்வரன்; குருவே பரபிரம்ஹம். அப்படிப்பட்ட குருவை நமஸ்கரிக்கிறேன்.
சுத்தம் செய்த இடம் காய்ந்த பின் ஸ்வாமியை பெட்டியில் இருந்து வெளியே எடுத்து பீடத்தின் மீது வைக்கலாம்….

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.