சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

This entry is part 1 of 3 in the series சிவ தாண்டவம்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை இயல்,இசை,நாடகம். இயற்றமிழ்:- எழுதுவதும் பேசுவதுமாகிய தமிழ் இது. இசைத்தமிழ்:- பண்ணிசைத்துப்பாடுவதே இசைத்தமிழ் நாடகத்தமிழ்:-நாட்டியம் அல்லது நாடகமாக விரிந்திருப்பதே நாடகத்தமிழ். நாடகத்தின் ஒரு பரிமாணம் கூத்து எனக்கொள்ளலாம்.கூத்தின் இன்னுமொரு பரிமாணம் நடனம் அல்லது நாட்டியம்,நர்த்தனம்.எல்லாமே நாடகம் தான்.ஆடல் தான். ஆயகலைகள் அறுபத்து நான்கில் […]

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 2

This entry is part 2 of 3 in the series சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – முந்தைய பகுதி “மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே”-சக்தி சரணன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நடனம் ஈசனின் பேரெழில் நடனம். எல்லா சிவத்தலங்களிலுமே உற்சவ மூர்த்தி நடராஜப் பெருமானாக இருந்தாலும் குறிப்பிட்ட ஐந்து சபைகளில் அவனாடிய ஆனந்த நடனம் சிறப்பாகக் கருதப்படுகிறது. கனக சபை அல்லது பொன்னம்பலம், ரஜதசபை என்ற வெள்ளியம்பலம், […]

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

This entry is part 3 of 3 in the series சிவ தாண்டவம்

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!”- அப்பர். தான் மட்டும் ஆடாமல் நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறானே அது தில்லையிலிருந்து தானே.அதனால் தானோ தில்லை நடராஜனுக்கு இவ்வளவு சிறப்பு! பின்னே! படைத்து காத்து அருளி மறைத்து அழிக்கும் பஞ்ச கிருத்தியங்களைத் தன் நடனத்தின் மூலம் ஓய்வின்றிச் செய்து கொண்டிருப்பதால் தான் நடராஜனின் ஆடல் […]