“தம்பீ! இது புதுப் பத்திரிகை.. நிறைய விளம்பரம் பண்ணனும். கடைக்குக் கடை விக்கறதோ இல்லையோ போஸ்டர் தொங்கி ஒரு பரபரப்பு ஏற்படுத்தணும். பிரகாசமான விளக்குகள் எரியும் போது இது சிம்னி விளக்கைக் கொளுத்தி வைச்ச மாதிரி இருக்கு. பத்திரிகைகாரங்க கிட்டே நிறைய கடைலே மாட்ற போஸ்டர் கேட்டு வாங்கு. பிக்-அப் ஆறதுக்கு இதான் நேரம். ஆயிடுச்சின்னு வைச்சுக்கோ.. அப்புறம் தன்னாலே ஜனங்களே கேட்டு வாங்குவாங்க.. தெரிஞ்சிக்கோ…” என்று அவர் சொன்னது அலிபாபா குகைக் கதவைத் திறந்த மந்திரமாக எனக்குப் பட்டது.