குரு பெயர்ச்சி 2020 – சிம்ம ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

(மகம், பூரம், உத்திரம் 1 பாதம் மட்டும்)

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.

சனி –  மகரத்தில்

ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது: ராசிநாதன் சூரியன் குருபெயர்ச்சி ஆரம்பிக்கும்போது சுகஸ்தானத்திலும் பின் பூர்வபுண்யம், ருணரோக சத்ரு, களத்திரம், ஆயுள் ஸ்தானங்களில் சஞ்சரிக்கிறார். இவை நன்மை தரும் இடங்கள். குருவின் பார்வை 10ம் இடம், 12ம் இடம் 2ம் இடம் இவற்றில் விழுவதாலும், லாபதிபதி புதன் கர்மாதிபதி சுக்ரன் மற்றும் பாக்யாதிபதி செவ்வாய் சஞ்சாரங்கள் மிக நன்றாக அமைவதாலும் சகல விதத்திலும் மகிழ்ச்சியை தருவதாக அமைகிறது. குடும்ப ஒற்றுமை பொருளாதார மேம்பாடு, புதிய வரவுகள், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் என்று நன்றாகவே இருக்கும். மேலும் ஜனன ஜாதகத்தில் புதன், குரு, செவ்வாய் நன்றாக இருந்தால் இந்த பலன்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும் இந்த பெயர்ச்சியில் வீடு வாகன யோகங்களும் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். வழக்குகள் சொத்து தகறாருகள் முடிவுக்கு வரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தி ஆகும். சனி மற்றும் கேது கொஞ்சம் தொந்தரவு தரலாம், ராகு வருவாயை இரட்டிப்பாக்குவார்.   

குடும்பம்: கணவன் மனைவிக்குள்ளான நெருக்கம் ஒருபக்கம் இருந்தாலும் வீண் விவாதங்களை தவிர்த்து விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. முடிவுகளை எடுக்கும்போது கலந்து ஆலோசித்து செய்வதும் நன்மை தரும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம்.கோபம் வந்தாலும் நிதானமாக அவர்களை வழிநடத்த வேண்டும். இல்லத்தில் புதிய வரவு.மகிழ்ச்சியை தரும்

ஆரோக்கியம் : உஷ்ணம், கண், கால் எலும்பு போன்றவை பாதிப்பு இருந்து கொண்டு இருக்கும் வைத்திய செலவுகள் தொடரும். அதேநேரம் தக்க ஆலோசனை கிடைக்கும் அதனால் செலவுகள் குறையும். பெற்றோர் ஆரோக்கியம், வாழ்க்கை துணை குழந்தைகள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சனி 3ம் பார்வை நன்மை தரும்.

உத்தியோகம் : வேலைபளு அதிகரிக்கும். ராகுவால் இரட்டிப்பு வருவாய் இருக்கும். சிலருக்கு புதிய உத்தியோகம், இடமாற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு இருந்தாலும் ஒரு அமைதி இன்மை இருந்து கொண்டு இருக்கும். முக்கியமாக அரசாங்கத்தில் உயர்பதவி, ராணுவம், போலீஸ், நிர்வாக துறையில் பணி புரிவோர் அதேபோல் பெண் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களில் பணி புரிவோர் இவர்களுக்கும் வருவாய் நன்றாக இருந்தாலும் மன அழுத்தம் ஏற்படும் நிதானமும் கவனமும் தேவை வார்த்தைகளை விடுவதில் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.

சொந்த தொழில் / வியாபாரம் : எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், ரியல் எஸ்டேட், உணவுப்பொருள்கள், கலைத்துறை, மீடியா, கொடுக்கல் வாங்கல், மருத்துவம், மருந்து பொருள் விற்பனை, ஓட்டல், சமையல், சிறு முதலீட்டு விற்பனை இவர்களுக்கு நல்ல நிலை இருக்கும். மற்றவர்களுக்கும் ஓரளவு நன்றாக இருந்தாலும் போட்டியை சமாளிக்க போராடனும். ஒருபக்கம் வருவாய் இருந்தாலும், மறுபக்கம் விரயம், கடன்

விவசாயி : செவ்வாய் ஓரளவு நன்மை செய்தாலும் கேது எதிர்வினை ஆற்றுவதால் மகசூல் வருமானம் இருக்கும் செலவும் கூட இருக்கும். புதிய முயற்சிகள் நிலம் வாங்குவது போன்றவற்றை பிப்ரவரி 2021க்கு மேல் செய்வது நல்லது. வீட்டில் சுப நிகழ்வுகள் இருக்கும். மகிழ்ச்சி இருக்கும். வழக்குகளில் தேக்கம் இருக்கும் அதன்காரணமாக செலவு அதிகரிக்கும்.

அரசியல்வாதி : பதவி கிடைக்கும் அதே நேரம் அழுத்தமும் உண்டாகும். எதிரி தொல்லை சமாளிக்க போராடவேண்டி இருக்கும். தொண்டர்களை தக்க வைக்க பணம் செலவழிக்கனும். கொஞ்சம் பொறுமை அவசியம், பணப்புழக்கம் தாராளம், கட்சியில் நல்லபெயர் இருக்கும். ரகசியங்களை காப்பது முக்கியம்.

மாணவர்கள் : புதன் நன்று அதனால் படிப்பில் உற்சாகம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டுதல்கள் நன்மை தரும். விரும்பிய பாடம் கல்லூரி, சிலருக்கு அயல்நாட்டு படிப்பு போன்றவை இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும்.

திருமணம் : 7க்குடையவர் 6ல் இருந்தாலும் சுக்ரன் பலமாக இருப்பதால் சிலருக்கு திருமண வரன் அமையும், ஜனன ஜாதகத்தில் 7ம் இடம் நன்றாக  இருந்து குருபார்த்தால் திருமணம் அமைந்துவிடும்.

குழந்தை : ஜனன ஜாதகத்தில் 5க்குடையவரை குரு பார்த்தாலும் குரு சம்பந்தம் இருந்தாலும் நடப்பு 5க்குடையவர் தசை புக்தி நடந்தாலும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு.

பெண்கள் : வேகமாக இருக்கலாம் அவசரம் கூடாது. உத்தியோகம் சொந்த தொழில் நன்றாகவே இருக்கும் வருவாய் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் தாராளம் நினைத்த செயல்கள் கைகூடும். பேர் புகழ் அந்தஸ்து உயரும். உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம் சாப்பாட்டு வகையில் கவனம் தேவை, பெரியோர்கள் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும். பெரிய தொந்தரவு இருக்காது எனினும் கவனமாக நடக்க வேண்டும்.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

அன்பன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block1, Alsa Green Park Appartment

Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus

Chrompet, Chennai – 600 044

Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)

Email : mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.