கடுகை மலையாக்கும் கலை ஓர் மிகைமை
நெருப்பை குளிராக்கும் கலை ஓர் தகைமை
முதலது கூடாதது மற்றது வேண்டுவது
கூடாதது குடியிருக்கும் பெண்டிர் பலருண்டு
வேண்டுவது தேடி அல்லுறும் ஆடவரும் உண்டு
மிகைமையா ? தகைமையா ?
என்ற
கிடுக்கிப்பிடியதனில்
தளுக்காக வளயவரும் ஆண்களும் சிலருண்டு!
முன்னவள் மருமகள்
பின்னவள் தாய்!
ஆம்.
முன் அவள் மருமகள் பின் அவள் தாய் !
மருமகளும் என் மகளே என
நினைப்பாரும் யாரும் இல்லை
நினைப்பாரென்று எண்ணியே இலவு
காத்த கிளி போல
ஏங்கியே இளைத்த
பெண்கள் பலருண்டு
விஞ்ஞானம் வளர்ந்த பின்பும்
மெய்ஞானம் உணராத
விந்தை உலகமடா
தொடரும் கதையிதடா !.