குரு பெயர்ச்சி 2020 – விருச்சிக ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிக ராசி

(விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய)

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.

சனி –  மகரத்தில்

ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : குரு பெயர்ச்சியின் ஆரம்பத்தில் ராசிநாதன் 5ல் வக்ரியாக, மேலும் 7ல் ராகு, ராசியில் கேது சூரியன் என்று. குரு 3ல் பெயர்ச்சியாகிறார் இதுவும் பெரிய நன்மைகளை தராது எனினும் கெடுதல் இல்லை பார்வையால் நன்மை. டிசம்பர் முதல் புதன் சுக்ரன் ராசியில் நன்மை தருவதாக அமைகிறது. 3ல் சனி ஆட்சியாக ஒரு தைரியத்தையும் முயற்சிகளில் வெற்றியையும் தருவார். போட்ட திட்டங்கள் வெற்றி பெறும். வழக்குகள் சாதகம் ஆகும், சுக்ரன் டிசம்பர் முதல் அளப்பறிய நன்மை செய்கிறார் ராசிநாதன் பிள்ளைகளின் கல்வி செலவையும் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகளையும் செய்வார், ஜனவரி முதல் புதன் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வார், பொருளாதார நிலையை உயர்த்துவார், குரு 5,9 பார்வைகளால் திருமணம், புத்திரலாபம், பூர்வீக சொத்துகள் கிடைத்தல் செல்வாக்கு உயர்தல் என செய்கிறார். ராகு, கேது, சூரியன் உடல் உபாதைகள் தொல்லைகள் மன கஷ்டங்களை அவ்வப்போது தருவார். பொதுவில் பல கிரஹங்கள் நன்மை செய்வதால் கெடுதல்கள் அதிகம் இராது.

குடும்பம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை படுத்துவார்கள். புதிய சொத்து வாங்கலாம். இல்லதில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதன் மூலம் உறவுகள் பலப்படும். தடைபட்ட முயற்சிகள் வெற்றி பெற்று இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். அந்தஸ்து கூடும்.

ஆரோக்கியம் : கேது,ராகு,சூரியன் சஞ்சாரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை உஷ்ணம், உடல் உபாதைகள் கண், வயிறு, கால், எலும்பு என்ற பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் ஆரோக்கியமும் பாதிக்க படும் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். தகுந்த ஆலோசனை தக்க வைத்தியம் எடுத்து கொண்டால் பெரிய பாதிப்புகள் இல்லை

உத்தியோகம் : பத்துக்குடையவர் ராசியில், கெடுதல் பார்வைகளும் இல்லை டிசம்பர் 16 வரை டல்லாக சாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் பின் ஓரளவு வளர்ச்சி இருக்கும் சின்ன அளவில் பதவி உயர்வு சம்பள உயர்வு என்று இருக்கும். ஆனாலும் பொருளாதார சிக்கல் இருக்காது. பாய்லர் , கட்டுமான தொழில், வீட்டுவேலைகள், சமையல் போன்ற துறையில் பணி புரிபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது ஆரோக்கியம் பாதிக்கலாம் அல்லது விபத்துகள் ஏற்படலாம். விரும்பிய இடமாற்றம் அல்லது நல்ல வேலை என்பது ஜனவரிக்கு பின் ஏற்படும். அதுவரை பொறுமை தேவை

சொந்த தொழில் / வியாபாரம் : பொருளாதாரம் நன்றாக இருக்கும் வளர்ச்சி இருக்கும். புதிய தொழில்விஸ்தாரணம் ஜனவரிக்கு மேல் தொடங்குவது நன்மை தரும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்கவும். போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். தொழிலாளர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். விபத்துகளால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் கவனம் தேவை.

விவசாயி : மகசூல் நன்று வருமானம் பெருகும். இருந்தாலும் உடல் பாதிப்பு மருத்துவ செலவு, கால்நடைகளால் மருத்துவ செலவு என்று இருக்கும். வழக்குகள் சாதகம் ஆகும். புதிய நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பண பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

அரசியல்வாதி : பதவிகளை எதிர்பார்த்தால் தாமதம் ஆகும் அல்லது பேருக்கு பதவி என்ற நிலை இருக்கும். செலவுகள் அதிகம் ஆகும். தொண்டர்களால் பண விரயம் ஆகும். வெளியூர் பயணங்களை கவனத்துடன் கையாள்வது நன்மை தரும். வாகன விபத்துகள் உண்டாகலாம்.

மாணவர்கள் : புதன் மந்த நிலையை தரும் பிப்ரவரிக்கு மேல்தான் படிப்பில் அதிக அக்கறை ஏற்படும். மதிப்பெண்கள் கூடும். வெளிநாட்டு படிப்பு முயற்சி விரும்பிய பாடம், கல்லூரி பிப்ரவரிக்கு மேல் நிறைவேறும்.

திருமணம் : 7ம் இடத்துக்கு குருவின் பார்வை இருப்பதால் திருமண வரன் வந்து விரைவில் திருமணம் முடிந்துவிடும். ஜனன ஜாதகத்திலும் 7க்குடையவர் தசா புக்திகள் அல்லது குரு,சுக்ர புக்திகள் நடந்தால் திருமணம் கைகூடும்.

குழந்தை : 5க்குடையவர் 3ல் இருந்தாலும், சனியின் பார்வை சேர்க்கை பெறுவதால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ராகுவின் பார்வை இருக்கு அதனால் ராகுவும் புத்திரபாக்கியத்தை தரும்.

பெண்கள் : மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பெரிய பிரச்சனைகள் இருக்காது கணவர் உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கும் வைத்திய செலவுகள் இருக்கும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இல்லை. உத்தியோகத்தில் சுமாரான நிலை இருந்தாலும் பொருளாதார சிக்கல் இருக்காது. பணவரவு தாராளம், சொந்த தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் புதிய வரவுகள் மன நிம்மதியை தரும்.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

அன்பன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block1, Alsa Green Park Appartment

Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus

Chrompet, Chennai – 600 044

Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)

Email : mannargudirs1960@gmail.com


 

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.