• Latest
  • Trending
  • All
ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 3

December 28, 2021
​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

March 27, 2023
கயிலாயச் சருக்கம்​

​சேலத்துப் புராணம் – ​கயிலாயச் சருக்கம்​

March 24, 2023
சேலத்துப் புராணம்

சேலத்துப் புராணம் – 1

March 24, 2023
கலா சேகர் கவிதைகள்

கலா சேகர் கவிதைகள்

March 22, 2023
Users DP to be displayed in Whatsapp groups

Users DP to be displayed in Whatsapp groups

March 14, 2023
நான் நன்றி சொல்வேன்..

நான் நன்றி சொல்வேன்..

March 2, 2023
Keep messages from disappearing

Keep messages from disappearing

February 14, 2023
காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள்

February 12, 2023
விடுமுறை

விடுமுறை

February 12, 2023
ஆதங்கம்

ஆதங்கம்

January 31, 2023
கற்றது கைம்மண்ணளவு

கற்றது கைம்மண்ணளவு

January 30, 2023
Voice Status in Whatsapp

Voice Status in Whatsapp

January 18, 2023
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, March 27, 2023
  • Login
பாகீரதி
  • முகப்பு
  • போட்டி கதைகள்
  • கட்டுரைகள்
    • பொது
    • பொருளாதாரம்
    • ஆன்மிகம்
    • சினிமா
  • சிறுகதை
  • தொழில்நுட்பம்
    • Android
    • Android Apps
    • General Tech News
    • Handsets
    • Malware / Virus / Scam
    • Whatsapp
    • Windows 11
  • மாத ராசி பலன்கள்
No Result
View All Result
பாகீரதி
No Result
View All Result
Home ஜோதிடம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 3

by லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி
December 28, 2021
in ஜோதிடம்
0
ஜாதக பொருத்தம்
655
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி – முதல் இரு பகுதிகள்

தசா சந்தி :

ஆண் பெண் ஜாதங்களில் தசைகள் புத்திகளை கணக்கிட வேண்டும். ஒருவருடைய தசை முடிந்து அதற்கு 11மாதங்களுக்குள் இன்னொருவர் தசை ஆரம்பித்தால் அது தசா சந்தி இது பிரிவை தரும் என ஒரு பாடம் உண்டு. இதுவும் கூட சரியாக இருப்பதில்லை. காரணம் இருவரது தசைகளும் + புத்திகளும் நட்பாக இருந்தால் இந்த சந்திகள் கெடுதலை செய்யாது என்பது அடியேன் அனுபவம். புத்திகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கு குரு தசை 17.02.2019 முடிந்து சனி தசை ஆரம்பம், இன்னொருவருக்கு கேது தசை 03.04.2019ல் ஆரம்பம் இது தசா சந்தி. இந்த கிரஹங்கள் நன்மை செய்வதாய் கூட அமையும். கிரஹத்தின் தசை அந்த கிரஹத்தின் வலிமையை பொறுத்து நன்மை தீமை அமையும் மேலும் அந்த கிரஹ தசையில் வரும் மற்ற கிரஹங்களின் புக்திகள் தசா நாதனுக்கு புத்தி நாதன் நட்பு, சமம் என்ற நிலையில் இருந்தாலும் கோச்சாரத்தில் தத்காலிக நட்பாக இருந்தாலும் நன்மைதான் செய்யும். ஆண் பெண் இருவரது தசா நாதன் புத்தி நாதன் ஒருவருக்கொருவர் நட்பு நிலையில் இருந்து அந்த நாதர்கள் ஜாதகரின் ராசியில் ஆட்சி நட்பு,மூல திரிகோணம் உச்சம் போன்ற இடங்களில் இருந்து வலுவாகவும் இருந்தால் இருவருக்கும் இப்படி இருந்தால் தசா சந்தி பற்றிய பயம் வேண்டாம்.

பொதுவாக மேலே சொன்ன தசவித பொருத்தம், தோஷம், தசா சந்திகள் தனிப்பட்ட ஜாதகங்களில் ஒற்றுமை இவை பார்த்து கடைசியாக முடிவு செய்ய வேண்டும் பொருத்தம் இருக்கா இல்லையா என.

சரி திருமண பொருத்தம் இப்படி பார்த்து முடிவு செய்தாகிவிட்டது தொடரலாம் என்பது இரண்டு ஜாதகங்களும் வாக்கியமோ அல்லது இரண்டும் திருகணிதம் என்பதாக கொண்டு முடிவு செய்வது.

https://paytm.business/link/49115/LL_423965736
Click here to donate for server to keep the site going

நம் நாட்டில் மொத்தம் 8 பஞ்சாங்கங்கள் (அவற்றுள்ளும் பல பிரிவுகள்) இருக்கின்றன. தமிழகத்தில் முக்கியமாக வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இரண்டு பஞ்சாங்கங்கள்.

வாக்கியத்தில் பலவகை, திருக்கணிதத்தில் பலவகை என்றும் இருக்கு அவரவர் எடுத்துக்கொள்ளும் அயனாம்ஸத்தை ஒட்டி இது வரும்.

பொருத்தம் பார்க்கும் போது ஜாதகர் திருக்கணிதத்தில், வரன் ஜாதகம் வாக்கியத்தில் இருக்கும். இங்கு குழப்பம் வரும். வரன் அஸ்வினி 4ம் பாதம் வாக்கியப்படி என கொடுத்து இருப்பார் ஆனால் திருக்கணிதத்தில் போட்டால் பரணி 1ம் பாதம் வரும்.

இங்கு அஸ்வினி என வரும்போது பொருத்தம் இருக்கும் பரணி என்றால் இல்லை (இந்த தசவித பொருத்தங்களில்) எதை வைத்து முடிவு செய்வது. வாக்கிய பஞ்சாங்கத்தினர் தங்களது தான் சரி என்பர், திருக்கணிதம் அவர்கள் தான் சரி என்பர். ஸ்ரீமஹா பெரியவா திருக்கணிதம் சிறந்த ஒன்று கிரஹ நிலைகளை திருத்தி கொண்டே வருகிறது என்று பரிந்துரைக்கிறார்.

பொதுவில் ராமன் அயனாம்ஸம் வாக்கிய பஞ்சாங்கத்தை ஒட்டியும் புஷ்யபக்ஷ அயனாம்ஸம் திருக்கணிதம் ஒட்டியும் வருகிறது திருக்கணிதம் லஹரி, சுத்த சித்ரபக்ஷ அயனாம்ஸம்படி பெரும்பாலும் வருகிறது

இவை 2 முதல் 8 டிகிரிவரையிலான வித்யாசங்களே. புஷ்ய பக்ஷ அயனாம்ஸம் அடியேன் அனுபவத்தில் மிக ஒத்து வருகிறது. அதனால் அடியேன் தனிப்பட்ட ஜாதகங்களை புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தில் மாற்றி கொண்டு பலன் சொல்கிறேன்.

இப்படி பொருத்தங்களை பார்த்து முடிவு செய்து மேற்கொண்டு தொடரனும். இந்த பொருத்தங்கள் ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போல் தான் இதையே முடிவாக கொள்ளக்கூடாது. பொருதம் இருந்துவிட்ட பிறகு வரனின் தன்மை குடும்ப நிலை பூர்வீகம் மனிதர்களின் குணாதிசயங்கள் என்று பலவற்றை முடிவு செய்த பிறகே திருமணம் செய்யவேண்டும்.

!!சுபம்!!

Tags: திருமண பொருத்தம்ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி2021
Share262Tweet164Send
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி

  • Trending
  • Comments
  • Latest
சோளிங்கர் நரசிம்மர் கோவில்

சோளிங்கர் நரசிம்மர் கோவில்

November 3, 2022
காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1

May 26, 2022
ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 3

December 28, 2021
சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

12
லைஃப் ஆஃப் பை (Life Of பை)

லைஃப் ஆஃப் பை (Life Of பை)

5
பெண் உரிமை

பெண் உரிமை

4
​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

March 27, 2023
கயிலாயச் சருக்கம்​

​சேலத்துப் புராணம் – ​கயிலாயச் சருக்கம்​

March 24, 2023
சேலத்துப் புராணம்

சேலத்துப் புராணம் – 1

March 24, 2023
பாகீரதி

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In