நட்சத்திர பொது குணங்கள் ஆயில்யம்

நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் ஆயில்யம்


செஞ்சொற்சா துரியன் சத்துரு நேயன்
மனதுக்கண் திரிவான் காட்டில்
பஞ்சை போல் சிறுதின்றி தின்பவன் அன்னை
பிதாக்கினியன் பக்தி உள்ளான்
வஞ்சமில் லாதெவர்க் கும் ஏளிதஞ்சொல்
வன்சுகவான் வலிமையோ ருக்கு
அஞ்சிடான் விழிபுருவன் உயர்ந்து ஒதுங்கி
இருக்கும் ஆயிலியந்தானே


அதாவது ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் பொது இயல்புகள்

மிகவும் சாமர்த்தியமாகப் பேசக் கூடியவர்கள்,

எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ளும் சூட்சமம் தெரிந்தவர்கள்,

எப்போது எதற்காவது கவலை கொண்டிருப்பவர்கள்,,

காட்டு விலங்கு போலத் திரிவார்கள்..

திண்பண்டப் பிரியர்கள் ,

அப்பா அம்மாவை நன்றாகக் கவனித்திருப்பார்கள்,

தெய்வ பக்தி உண்டு,

வஞ்சனை தெரியாது,

கண்ணும் நெற்றியும் உயர்ந்து ஒதுக்கமாக இருக்கும்


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.