பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
‘ஹைக்கூ‘ கவிதைகள்
சேற்று நீரில்
குதித்து விளையாடியது குழந்தை
இணைத்துக் கொள்கிறது சூரியன்
சூரியனின் புத்திசாலி மகன் – கர்ணன்
தன்னால் விளையும் பாதகங்களை சூரியன் காண இயலாது. கர்ணனும் அதே போல் தான். விருப்பப்பட்டு இறுதிவரை அனைத்தையும் கொடுத்தான் அவனது மமதையை தவிர. இருந்தாலும், சூரியன் தனித்து வீற்றிருக்கிறார் உயிர் தந்து காப்பவராக. காரிருட்டிலும் சூரியன் தனியாக பிரகாசிக்கும்!!!
பதிலுக்கு பதில்…
இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.
பழிவாங்கும் தீ – அம்பை
அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள்
அஷ்ட வசுக்கள்
அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார்.
Bharat Griha Raksha Policy – வீட்டுக்குக் காப்பீடு
வீட்டுக்கடன் வாங்கும் போது வங்கி ஊழியர் உங்களிடம் ஒரு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீட்டை விற்க முனைவார், தேவையான அளவு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுப்பது அத்தியாவசியம் ஆனால் வீட்டுக் கடனுடன் இணைந்த டெர்ம் பாலிசி பெருத்த நஷ்டம். தயவு தாட்சண்யமின்றை அதை நிராகரியுங்கள். ஆனால் வீட்டுக்குக் காப்பீடு மிக அவசியம் அதை எடுக்க மறக்காதீர்கள்
நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி
ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகைய துன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார்.
சாபக்காலத்தில் கிடைத்த வரம்
அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள்
சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின் மகள் தானே நீ ? ” என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின