சமீப காலத்தில் சரித்திர நாவல்கள் எழுதி பெயர்பெற்ற ” காலச்சக்கரம்” திரு நரசிம்மா அவர்கள் எழுதிய மற்றொரு நாவல் இது. இது சரித்திர / வரலாற்று நாவலா என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்று சொல்வேன். மஹாபாரதத்தில் வரும் ஒரு கதையை அடிப்டையாகக் கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த கதையின் அடிப்படையில் இவர் சொல்லி இருப்பது ஒரு பெண் தான் விரும்புவதை சாதிக்க எந்த எல்லைக்கும் போவாள் என்று.
கதை இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமாய் நகர்கிறது. சிதம்பரத்தில் பிறக்கும் ஒரு குழந்தை ஒரு கந்தர்வனின் பன்னிரெண்டாவது பிறவி என்றும் ஒவ்வொரு பிறவியிலும் அவனை துரத்தி வரும் யட்சினியின் பிடியில் இருந்து இப்பிறவியிலும் அவன் தப்பிவிட்டால் அவன் மீண்டும் கந்தர்வ உலகை அடைந்துவிடுவான் என்றும் அக்குழந்தை பிறந்தவுடன் கணிக்கிறார் சகடாவாக்கியார். அதேபோன்று அவனை துரத்தும் யட்சிணியின் அடையாளங்களையும் தெரிவிக்கிறார். அவன் யட்சிணியின் பிடியில் இருந்து தப்பினானா இல்ல சிக்கினானா அதனால் வரும் சிக்கல்கள். இதுதான் நாவலின் சுருக்கம்.
கதையின் முக்கிய