குரு பெயர்ச்சி 2020 – தனூர் ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

குரு பெயர்ச்சி பலன்கள் – தனூர் ராசி

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.

சனி –  மகரத்தில்

ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : இந்த குரு பெயர்ச்சி பல நன்மைகளை தருகிறது. பெயர்ச்சி முழுவதும் செவ்வாய், சூரியன் தவிர மற்ற கிரஹங்கள் சாதகம், சூரியனும் மார்ச் முதல் நன்மை செய்வார். குருவால் பொருளாதார ஏற்றம் பணப்புழக்கம் தாராளம், புகழ், அந்தஸ்து கூடுதல், புதனால் வாக்கு வண்மை கூடுதல், கல்வியில் முன்னேற்றம், சுக்ரன் ஆடை ஆபரண சேர்க்கை சொத்துகள் வாங்குதல், முயற்சியில் வெற்றி, ராகு கேதுக்கள் கடன் தொல்லை வழக்குகள், எதிரிகள் தொல்லை, நோய் நொடிகள் நீங்குதல் என்று எல்லாவற்றையும் முறியடித்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் புதிய சிந்தனைகள் தோன்றும் அவை செயல்வடிவம் பெறும். உறவுகளால் நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும் தான தர்மம் செய்தல், கோயில் செல்லுதல் விருந்து கேளிக்கை என்ற நிலை இருக்கும். செவ்வாய் வீண் விவாத்ததை கொண்டுவரும், சூரியன் மன சோர்வை தரும் இருந்தாலும் மற்ற கிரஹங்கள் சாதகமாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள் வரும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

குடும்பம்: மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளால் உறவுகளின் நெருக்கம் அதிகம் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை, பெற்றோர் ஆசிகள், புதுவீடு குடிபோகுதல் வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை செல்வ வளம் இருக்கும்.

ஆரோக்கியம் : செவ்வாய் & சூரியனால் உடல் உபாதைகள் உஷ்ணம், வயறு கண், மார்பு பிரச்சனைகள் மன அழுத்தம் போன்றவை அவ்வப்போது இருந்து கொண்டிருக்கும். வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் வழியிலும் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். தகுந்த ஆலோசனை, தியான பயிற்சிகள் வைத்திய சாஸ்திரப்படி நடத்தல் நலம் தரும்.

உத்தியோகம் : பதவி உயர்வு சம்பள உயர்வு, புதிய வேலை, விரும்பிய இடமாற்றம், மேலதிகாரியிடம் நல்ல பெயர், வேலையில் கெட்டிக்காரத்தனம் பொருளாதார ஏற்றம், வெளிநாட்டு வேலை என்று நன்றாகவே இருக்கும் வேலை பளு இருந்தாலும் உற்சாகத்துடன் செய்வார்கள். மருத்துவ செலவுகள் இருக்கும். கவனம் தேவை, எந்திரங்களில் வேலை செய்வோர்கள் கவனம் தேவை விபத்து ஏற்படலாம். மின் சாதனங்களை உபயோகிக்கும் போதும் கவனம் தேவை.

சொந்த தொழில் / வியாபாரம் : வளர்ச்சி அதிகம் இருக்கும் நாள்பட்ட சரக்குகள் விற்பனை ஆகும், புதிய தொழில்விஸ்தரிப்புகள், புதிய தொழில் தொடங்குதல் போன்றவை நல்லபலனை தரும். தொழிலாளர்கள் உற்சாகமாக வேலை செய்வர் ஆர்டர்கள் நிறைய வரும். வங்கி கடன் கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் சரியில்லை அதனால் கணக்கு வழக்குகளை சரியாக வைக்கவும் அரசாங்கத்துடன் மோதல் வேண்டாம். அரசு உதவி தாமதம் ஆகும். எதிரிகளை சமாளிப்பீர்கள். பணவரவு தாராளம்.

விவசாயி : வழக்குகள் சாதகம், மகசூல் வருமானத்தை அதிகரிக்கும். கால்நடைகள் வைத்திய செலவு கொடுக்கும். ஒருபக்கம் இல்லத்தில் சுப நிகழ்வுகள் பொருளாதாரம் என நன்றாக இருந்தாலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் அல்லது அக்கம்பக்கத்தாரோடு விரோதம் அதனால் தேவையற்ற செலவுகளும் இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை.

அரசியல்வாதி : நினைத்த பதவி கிடைக்கும். பணப்புழக்கம் தாராளம் தொண்டர்கள் உற்சாகம் இருக்கும். அதேநேரம் எதிரிகளின் தொல்லை இருக்கும். தேவையற்ற பிரச்சனையில் தலையிட வேண்டாம். வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை, மேலிட மோதல் வேண்டாம். உடல் ரீதியான பாதிப்புகளும் உண்டாகும், சாப்பாட்டில் கவனம் தேவை

மாணவர்கள் : முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் படிப்பில் கவனம் தேவை புதன் ஜனவரி வரை நல்லபலன் தரவில்லை, சூரியனும் உடல் மன சோர்வை தந்து படிப்பில் தடை பண்ணுவார், நிதானம் தேவை பெற்றோர் ஆசிரியர் ஆலோசனையை பின்பற்றனும். ஜனவரிக்கு பின் படிப்பில் வேகம் மதிப்பெண்கள் பெறுதல் விரும்பிய படிப்பு, கல்லூரி, அயல்நாடு என்று அமையும். பொறுமை தேவை

திருமணம் : 7க்குடையவர் லாபத்தில் இருப்பதாலும் 2ல் குரு திருமண யோகத்தை கொடுக்கிறது. எதிர்பார்த்த திருமணம் கைகூடும் கவலை வேண்டாம்

குழந்தை : 5க்குடையவர் 4ல் இருந்தாலும் குருவுடன் சம்பந்தம் பெறுவதால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தனிப்பட்ட ஜாதகத்தில் தசா புக்திகள் சாதகமாய் இருந்தால் நிச்சயம் குழந்தை உண்டு

பெண்கள் : உற்சாகத்துக்கு குறைவு இருக்காது. சில சமயம் மனச்சோர்வு அக்கம்பக்கத்தாருடன் சண்டை அல்லது அலுவலகத்தில் பிரச்சனை என்றும் அல்லது உடல் ஆரோக்கிய பாதிப்பும் இருக்கும். அல்லது குடும்பத்தில் மற்றவர்களுக்கு வைத்திய செலவு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நிலை, சொந்த தொழில் செய்வோரும் பணவரவு தாராளம் பொதுவில் அதிக நன்மை எல்லோருக்கும் இருக்கு.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

அன்பன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block1, Alsa Green Park Appartment

Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus

Chrompet, Chennai – 600 044

Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)

Email : mannargudirs1960@gmail.com


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.