குரு பெயர்ச்சி 2020 – துலாம் ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

(சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய)

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.

சனி –  மகரத்தில்

ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : குரு பெயரும்போது ராசிநாதன் ராசியில் ஆட்சி, புதன் உடன், பொதுவாக ராசிக்கு 4ல் குருவருவது அவ்வளவு நல்லபலனை தராது என்பர் ஆனால் குரு நீச ராசியில் சஞ்சரிப்பது மைனஸ் ப்ளஸாக மாறும். வீடுவாகன யோகம், சனியால், பொருளாதார ஏற்றம், பத்தாம் இட பார்வை தொழிலில் வருமானம் அதிகரித்தல், மேலும் புதன், சூரியன் செவ்வாய் நன்மை தரும் நிலையில் இருப்பதால் வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். ஜனன ஜாதகத்தின்படி தசா புக்திகள் சாதகமாய் இருந்தால் இந்த நிலை இன்னும் நன்றாக இருக்கும். அதே நேரம் 2ல் கேது, 8ல் ராகு கொஞ்சம் வேலையில் இடைஞ்சல், எதிர்பாராத செலவுகள்,மருத்துவ செலவுகள் என்று கொடுக்கும். கவனம் தேவை கொஞ்சம் மன சஞ்சலத்தை அளிக்கும்.

குடும்பம்: 2க்குடையவர் குருவீட்டில் இரண்டில் கேது, சூரியன், டிசம்பர் கடைசியில் புதன் சுக்ரன். வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் கணவன் மனைவி பிணக்கு, எதிர்பாராத இழப்புகள் என்று இருந்தாலும் ஜனவரி முதல் ஐஸ்வர்யம், இல்லத்தில் சுபம், ஒற்றுமை, புதிய வரவு, புது வீடு குடிபோகுதல், மகிழ்ச்சி நிறைந்திருத்தல் என்று இருக்கும்.

ஆரோக்கியம் : 2ல் கேது,சூரியன் குடும்ப அங்கத்தினர்களுக்கு உடல் உபாதைகள் வந்து மருத்துவ செலவை கொடுக்கும். உஷ்ணத்தினால் பாதிப்பு இருக்கும், மன சோர்வு உண்டாகும் ஆனாலும் 3க்குடைய குரு பார்வை பலம் தரும் 4ல் சனி சுகத்தை தரும் வெற்றிகள் உண்டாகும்.

உத்தியோகம் : பத்துக்குடையவர் 2ல் டிசம்பர் வரை, 6ல் செவ்வாய் வருமானம் வந்து கொண்டிருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும். ஆடைவடிவமைப்பு, எழுத்தர், பாய்லர், கட்டுமான பணி, விவசாயம், எலெக்ட்ரானிக்ஸ், போன்ற துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். எதிர்பாராத தடங்கல், திடீர் இடமாற்றம் அல்லது சக தொழிலாளிகளால் தொல்லை இருந்து கொண்டிருக்கும். மேலதிகாரிகளுடன் மோதல் போக்கு வேண்டாம். நன்றாக இருக்கும் ஆனால் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.

சொந்த தொழில் / வியாபாரம் : அரசாங்க உதவி கிடைக்கும், வியாபாரம் பெருகும், நிறைய ஆர்டர்கள் வந்து தொடர்ச்சியான வருமானத்தை தரும். வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை விபத்து ஏற்பட வாய்ப்பு புதிய தொழில் விஸ்தாரணம் ஜனவரிக்கு மேல் செய்வது நல்லது. தொழிலாளிகளை/பார்ட்னர்களை அனுசரித்து போவது நல்லது. பெரிய பிரச்சனைகள் இருக்காது எனினும் மன வருத்தம் ஏற்படலாம். தொழில் நல்ல நிலையில் இருக்கும்.

விவசாயி : வழக்குகள் சாதகமற்று இருக்கும். வருமானம் வந்தாலும் செலவும் அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நிலம் வாங்கும் திட்டம் ஜனவரிக்கு மேல் நிறைவேறும், அக்கம்பத்தாரோடு மோதல் போக்கு வேண்டாம். வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை.

அரசியல்வாதி : பதவி தேடி வரும், பிரச்சனைகளும் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும், உடன் இருப்போரே தொல்லை தருவர் எதிலும் ஒருகவனம், வாக்கு கொடுப்பதில் நிதானம், பணப்புழக்கம் தாராளம், வசதிகளும் வரும். புகழும் இருக்கும். கலந்து கட்டினாற்போல இருக்கும் யோசித்து செயல்படுவது நன்மை தரும்.

மாணவர்கள் : புதன் ராசியில் பின் டிசம்பரில் 2ம் இடம் புத்திகூர்மை அதிகரிக்கும் நல்ல படிப்பு அதிக மதிப்பெண், விரும்பிய பாடம் கல்லூரி கிடைத்தல் பெற்றோர் ஆசிரியர் பாராட்டு இருந்தாலும் 2ல் கேது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை, பெரியோர்கள் ஆலோசனைப்படி நடக்கவும்

திருமணம் : 7க்குடையவர் தசாபுக்திகள் நடந்து கொண்டிருந்தால் வரன் அமைந்து திருமணம் முடிந்துவிடும். அல்லது 7ஐ பார்ப்பவர் 7ல் இருப்பவர் குரு சம்பந்தம் பெற்று அவர்கள் தசைபுக்திகள் நடந்தாலும் திருமணம் அமைந்துவிடும்.

குழந்தை : 5க்குடைய்வருடன் குரு சேர்ந்து இருப்பதாலும் 5ம் இடத்துக்கு கெடுதல் பார்வை இல்லை என்பதாலும் குழந்தை பேறு சிலபேருக்கு உண்டாகும். சனி, குரு, மற்றும் ஜனன ஜாதகத்தில் 5ஐ பார்ப்பவர் தசைபுக்தி நடந்தால் நிச்சயம் குழந்தை உண்டாகும்.

பெண்கள் : மகிழ்ச்சி அதிகரிக்கும், வாழ்க்கை துணைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உடல் உபாதைகள் கொஞ்சம் மன வருத்தம் கொடுக்கும். ஆனாலும் வைத்தியசெலவுகள் குறைவாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, புதிய பொருள்கள் வாங்குதல், விருந்து கேளிக்கைகள் என்று மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், சொந்த தொழிலில் வளர்ச்சியும் நிறைந்திருக்கும். நினைத்தது நடக்கும்

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

அன்பன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block1, Alsa Green Park Appartment

Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus

Chrompet, Chennai – 600 044

Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)

Email : mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.