Inspector Rishi

Inspector Rishi

அடுத்தடுத்து சில கொலைகள். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நபர்கள் அதே போல் கொல்லப்பட்டு தொங்கவிடப்படுகின்றனர். வழக்கை விசாரிக்க வந்த ரிஷி எந்தவித தடயமும் இன்றி வனத்தை சுற்றி வருகிறார். எந்த ஒரு கொலையிலும், யாரிடமும் முழுவதாக விசாரிப்பதாக காட்டவில்லை. கதையில் தனி டிராக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒரு பக்கம். அவர்களை பிடிக்கத் துடிக்கும் வன சரகராக கிருஷ்ணா தயாள்.