இலங்கை 'கதம்பம்' பத்திரிகை 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்' என்ற போட்டியை நடத்தியது என்றால் குமுதம் 'எனக்குப் பிடித்த நாவல்' என்ற போட்டி ஒன்றை நடத்தியது. அந்தப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரைகளில் ஒன்றாக எனது கட்டுரை தேர்வாயிற்று. பேராசிரியர் கல்கியின் மகள், மகன்...
அன்று இரவு அசந்து தூங்கினாலும் சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். எழுந்து பல் விளக்கி காலைக்கடன் முடித்து குளித்து தலை வாரிக் கொண்டிருந்த பொழுது சின்னசாமி உள்ளே நுழைந்தார். "நல்லாத் தூங்கினீங்களா, சார்?" என்றார். "நல்ல களைப்பு சின்னசாமி. அதனால் அடித்துப் போட்டாற்...
"எங்கே தங்கப் போறீங்க?.. பேச்சுலரா?.. அப்படின்னா ஆபிஸ்லேயே தங்கிக்கலாமே?.. எதுக்குச் சொல்றேன்னா, இங்கேயே எல்லாம் இருக்கு.. கிருஷ்ணகிரி போய் வருவது தேவையில்லை. அங்கே ரூம் எடுத்தீங்கன்னா அது வேறே செலவு.." என்று எல்லாம் சொல்லி விட்டு, "பாத்து செய்யுங்க.." என்றார் கேண்டீன்...
கொஞ்ச நேரத்தில் என்னைக் கூப்பிடுவதாக ஒருவர் வந்து அழைத்துப் போய் இன்னொரு அறைக்குள் போகச் சொன்னார். அந்த அறை தான் தலைமை அதிகாரி அறை போலிருக்கு. அங்கு பாலசுப்ரமணியம் நிற்க அதிகாரி அவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து...
இரண்டாவது அக்கிரஹாரத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஸ்ரீனிவாச அய்யங்கார் என்ற பெரியவர் இருந்தார். அவர் முதல் அக்கிரஹாரத் தெரு முனையில் ஜாப் டைப்ரைட்டிங் நிலையம் ஒன்றை சொந்தத்தில் வைத்திருந்தார். அய்யங்கார் மிகப் பிரமாதமாக தட்டச்சு செய்வார். காட்ராக்ட் பாதிப்பில்...
எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த கிட்டத்தட்ட அத்தனை பருவ இதழ்களூம் இருந்தன. ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம். மேட்டுத் தெரு, மரவனேரிப் பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று...
தட்டச்சு லோயர் கிரேடில் தேர்ச்சிப் பெற்றதும், சுருக்கெழுத்துக்காக இன்ஸ்ட்டியூட் வகுப்புகளுக்குப் போகாமல் இரண்டாவது அக்கிரஹாரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரிடம் பயிற்சி வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த பயிற்சி வகுப்பில் பயின்ற சோமு என்பவர் பழக்கமானார். சோமு திருமணமானவர். மாடர்ன்...
சும்மாச் சொல்லக்கூடாது. ராமச்சந்திரன் பிரமாதமா படங்கள் வரைவான். நெடுக்க நாலு கோடு போட்டு, குறுக்கேயும் பக்கவாட்டிலும் இரண்டு கோடிழுத்து கீழேயும் மேலேயும் வரிவரியா கலர் பென்சிலில் தீட்டிறது தான் ஆரம்ப வேலை. அது என்னவோ தான் வரையும் எல்லாச் சித்திரங்களுக்கும் இப்படித்...
சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன. ஈ காக்காய் இல்லை. ஹோவென்றிருந்தது. கொஞ்ச தூரம் போனதும், "சைக்கிள்லே ஏறி மிதிடா.." என்றான்.ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான். இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது....
என் ஆர்வத்திற்குத் தீனி போடுகிற நிகழ்வு ஒன்று நடந்தது. ஆனந்த விகடன் பொன்விழா பரிசுப் போட்டிகளின் போது சிறந்த நாவலைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எஸ்.ஏ.பியும் இருந்தார். அந்தத் தேர்வுக் குழுவின் புகைப் படத்தையும் விகடனில் வெளியிட்டிருந்தார்கள். அந்த குரூப் போட்டோவின் கீழே...