அழியாத மனக்கோலங்கள் – 9

This entry is part 9 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த கிட்டத்தட்ட அத்தனை பருவ இதழ்களூம் இருந்தன. ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம். மேட்டுத் தெரு, மரவனேரிப் பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று சின்ன வட்டத்திற்கே இருபது வீடுகள் தேறி விட்டன. இருபது வீடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில் வாங்கிய புத்தகங்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிந்தது. ஒரு பகுதிக்கு ஆனந்த விகடன் என்றால் இன்னொரு பகுதிக்கு குமுதம் இப்படி. திங்கள், புதன், வெள்ளி ஒரு பகுதி என்றால் செவ்வாய், வியாழன், சனி இன்னொரு பகுதி. ஞாயிறு எங்கள் நடமாடும் நூலகத்திற்கு விடுமுறை.

அழியாத மனக்கோலங்கள் – 8

This entry is part 8 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

தட்டச்சு லோயர் கிரேடில் தேர்ச்சிப் பெற்றதும், சுருக்கெழுத்துக்காக இன்ஸ்ட்டியூட் வகுப்புகளுக்குப் போகாமல் இரண்டாவது அக்கிரஹாரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரிடம் பயிற்சி வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த பயிற்சி வகுப்பில் பயின்ற சோமு என்பவர் பழக்கமானார். சோமு திருமணமானவர். மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தார். அவருடன் மார்டன் தியேட்டர்ஸைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மார்டன் தியேட்டர்ஸ் வண்டியில் ஏற்காடு போனோம் இந்தத் தடவை லேடிஸ் ஸீட் என்ற இடத்திற்கு அழைத்துப் போய் அங்கு மந்திரி குமாரி திரைப்படத்திற்காக படப்பிடிப்பு நடந்த இடங்களைக் காண்பித்தார்.

அழியாத மனக்கோலங்கள் – 7

This entry is part 7 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

சும்மாச் சொல்லக்கூடாது. ராமச்சந்திரன் பிரமாதமா படங்கள் வரைவான். நெடுக்க நாலு கோடு போட்டு, குறுக்கேயும் பக்கவாட்டிலும் இரண்டு கோடிழுத்து கீழேயும் மேலேயும் வரிவரியா கலர் பென்சிலில் தீட்டிறது தான் ஆரம்ப வேலை. அது என்னவோ தான் வரையும் எல்லாச் சித்திரங்களுக்கும் இப்படித் தான் செய்வான். அப்புறம் கண்ணு, மூக்கு, காதெல்லாம் எப்படி வரும் என்பது எங்களுக்கு தெரியாத பரம ரகசியம். பக்காவா குதிரை, யானை, மனுஷன், மனுஷி, பறவை, பாடகர் என்று வரைந்து விட்டு ‘ஆர் ஏ என்’ என்று இங்கிலீஷில் எழுதி பெயரைச் சுற்றி ஒரு வட்டம் போடுவான். அதான் அவன் ஸ்டைல்.. எங்கள் கூட்டத்தில் அவனை அடிச்சிக்க ஆளில்லை என்று அந்த வயசிலேயே அவனுக்கு தெனாவெட்டு ஜாஸ்தி.

அழியாத மனக்கோலங்கள் – 6

This entry is part 6 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன. ஈ காக்காய் இல்லை. ஹோவென்றிருந்தது. கொஞ்ச தூரம் போனதும், “சைக்கிள்லே ஏறி மிதிடா..” என்றான்.ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான். இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது. ஹேண்டில் பாரை இறுகப் பற்றிக் கொண்டு வண்டி சாய்ந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி மிதித்தேன். மலையின் கீழ்ப் பக்கமோ, மேல் பக்கமோ ஏதாவது வண்டி– லாரி வர்ற சத்தம் கேட்டால் டக்கென்று சைக்கிளிலிருந்து இறங்கி ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம். சில்லென்று காற்று வீசுகிற சூழ்நிலை உற்சாகமாக இருந்தது. அதற்கடுத்து பத்தே நிமிடங்களில் மலையின் மேல் பகுதிக்கு வந்து ஏரிக்கு வந்து விட்டோம்.

அழியாத மனக்கோலங்கள் – 5

This entry is part 5 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

என் ஆர்வத்திற்குத் தீனி போடுகிற நிகழ்வு ஒன்று நடந்தது. ஆனந்த விகடன் பொன்விழா பரிசுப் போட்டிகளின் போது சிறந்த நாவலைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எஸ்.ஏ.பியும் இருந்தார். அந்தத் தேர்வுக் குழுவின் புகைப் படத்தையும் விகடனில் வெளியிட்டிருந்தார்கள். அந்த குரூப் போட்டோவின் கீழே இடமிருந்து வலமாக என்று ஒவ்வொருவரின் பெயரையும் பிரசுரித்திருந்தார்கள். அவர்கள் சொல்லியிருந்தபடி இடமிருந்து வலமாக என்று ஒவ்வொருவராக எண்ணிக் கொண்டு வந்தவன், ஆறாவது நபர் வரும் பொழுது அவர் தோற்றம் மங்கலாக நிழல் போல தேசலாகத் தெரிந்து உற்று உற்றுப் பார்த்து சலித்துப் போனேன். சென்னைக்கு வந்த பிறகு ஒரு நாள் எஸ்.ஏ.பி. அவர்களைப் பார்த்தே விடுவது என்று விடாப்பிடியாகத் தீர்மானித்து குமுதம் அலுவலகத்துக்கே போனேன். அதெல்லாம் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.

அழியாத மனக்கோலங்கள் – 4

This entry is part 4 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

“தம்பீ! இது புதுப் பத்திரிகை.. நிறைய விளம்பரம் பண்ணனும். கடைக்குக் கடை விக்கறதோ இல்லையோ போஸ்டர் தொங்கி ஒரு பரபரப்பு ஏற்படுத்தணும். பிரகாசமான விளக்குகள் எரியும் போது இது சிம்னி விளக்கைக் கொளுத்தி வைச்ச மாதிரி இருக்கு. பத்திரிகைகாரங்க கிட்டே நிறைய கடைலே மாட்ற போஸ்டர் கேட்டு வாங்கு. பிக்-அப் ஆறதுக்கு இதான் நேரம். ஆயிடுச்சின்னு வைச்சுக்கோ.. அப்புறம் தன்னாலே ஜனங்களே கேட்டு வாங்குவாங்க.. தெரிஞ்சிக்கோ…” என்று அவர் சொன்னது அலிபாபா குகைக் கதவைத் திறந்த மந்திரமாக எனக்குப் பட்டது.

அழியாத மனக்கோலங்கள் – 3

This entry is part 3 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

புதுப் பத்திரிகையின் முதல் இதழ். அதைப் பார்க்க வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது. உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு சேலம் டவுன் ரயில் நிலையத்திற்குப் பறந்தேன். அங்கு பார்ஸல் பகுதிக்குப் போய் பில்லைக் காட்டினேன். ஏதாவது ஐடி இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று தெரிந்ததும் உங்களை ஏஜெண்ட்டாக நியமித்த கடிதமாவது இருக்கிறதா என்று கேட்டார்கள். கொண்டு வரவில்லை என்று தெரிந்ததும் உங்கள் ரப்பர் ஸ்டாம்பு சீலாவது கொண்டு வந்திருக்கிறீர்களா என்று லேசான எரிச்சலுடன் கேள்வி வந்தது.

அழியாத மனக்கோலங்கள் – 2

This entry is part 2 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எப்படி அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் பிடித்துப் போனதோ அப்படியே மேடைப் பேச்சில் பல புதுமைகளைப் புகுத்திய அந்நாளைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மனசுக்கு மிகவும் பிடித்துப் போனவர்கள் ஆனார்கள். அவர்கள் பேசிய தமிழ் மனதைக் கவர்ந்தது. மேடைப் பேச்சிலும் உரைநடையிலும் அடுக்கு மொழியைப் புகுத்திய அண்ணாவின் தமிழ் கேட்டு தேன் மாந்திய வண்டானேன். வீட்டு வெளித் திண்ணையில் படுத்துக் கொள்வதாக சொல்லி விட்டு பாயும் தலையணையையும் போட்டு விட்டு முன் இரவு தாண்டியதும் அண்ணா பேசுகிறார் என்றால் பொதுக் கூட்டத் திடலுக்குப் போய்விடுவேன்.

வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)

This entry is part 4 of 4 in the series சேலத்துப் புராணம்

அத்தியாயம்-3 தக்ஷனின் யாகத்திலிருந்து வெளியேறிய ததீசி முனிவரை நாரதர் வழி மறித்தார். நேரே கயிலாயம் சென்று உமா மகேஸ்வரனை மனந்தினாலும், நாவினாலும், உடலினாலும் சிந்தித்து, துதித்து வணங்கி நடந்தவற்றை முறையிட்டார். “இல்லை நாரதா! தக்ஷன் “வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)”

அழியாத மனக்கோலங்கள்

அழியாத மனக்கோலங்கள் – 1

This entry is part 1 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

சேலம் நகர அமைப்பே விசித்திரமானது. மிகப் பெரிதும் அல்லாத அதே நேரத்தில் மிகச் சிறிதும் அல்லாத அமைப்பைக் கொண்ட நடுவாந்திர நகரம் அது. மூன்று இரயில் நிலையங்களைக் கொண்ட விசேஷம் கொண்ட ஊர். மெயின் இரயில் நிலையம் இருந்த இடம் சூரமங்கலம் என்று அழைக்கப்பட்ட பகுதி. இரண்டாவது ரயில் நிலையம் முற்றிலும் வியாபார போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டு மார்க்கெட் இரயில் நிலையம் என்றிருந்தது. சேலத்தின் மிகப் பெரிய வியாபார ஸ்தலமான லீபஜார் அருகிலேயே இருந்தது. இந்த இடத்தில் நடப்பது என்பது லாரிகளுக்கிடையே புகுந்து வெளி வருவதாகத் தான் இருக்கும். மூன்றாவது இரயில் நிலையம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். நகர்ப் புறத்து மக்கள் வாழும் பகுதி. சென்னைக்கு அடுத்தபடி சேலத்தில் தான் திரையரங்குகள் அதிகம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சினிமா பார்ப்பதில் பிரியம் கொண்டவர்கள்.