தலைமுறை தாண்டிய நேசம்

இது எங்க  வீட்டு விசேஷம் தான்.அம்மா சைடு. அதனால கல்யாண ஏற்பாட்ல ஏதாவது சில பொறுப்புகளை நாம செய்யனும்னு அம்மா சொன்னாங்க. இவங்க தான் என் அம்மா என அருகிலிருந்த முதிய பெண்மணியை காட்டினார். இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. அந்த அம்மா கிருஷ்ணாவிடம் நீ மேலேயே நின்னு என்ன வேணுமோ அத செய் என்றார்.

நேர்த்திக் கடன்

நேர்த்திக் கடன்

குழந்தையில்லாதவர்களை எப்படி நடத்துவார்களென்பதை என் குடும்பத்திலேயே பார்த்துள்ளேன்.நானும் கொஞ்சம் பருமனான உடல்வாகுடையவள்தான். போதாக் குறைக்கு பிட்னெஸ் ட்ரிங்க்களும் 30 நாட்களில் எடைக் குறைக்கலாம் முகாம்களும் அதிகமாக வரத் துவங்கிய வேளை அது. அவசரமாக சாலையைக் கடக்கும்போது, பேருந்தில் என்று எங்கு பார்த்தாலும் அந்த விளம்பர நோட்டிஸ்கள் வம்படியாக என் கைகளில் திணிக்கப்பட்டன. குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என வேறு கூறிச் சென்றனர். இதென்ன முருகா சோதனை. அப்படியொரு கஷ்டத்தை எனக்கு கொடுத்து விடாதே. எனக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து முதலில் நீயே வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.அப்படி பிறந்தால்………