கங்கை ஆரத்தி பார்த்து வருவோம் என்று இங்கே இருக்கும் நபர் அழைக்க நானும் நடந்து சென்றேன். கூடவே இரண்டு பெரியவர்கள் வந்தார்கள். நான்கு பேருமாக ராம்குண்ட் எனும் படித்துறைக்கு சென்ற போது ஆரத்திக்கான ஏற்பாடுகள் செய்து தயாராக இருந்தார்கள். என்னை உட்கார வைத்து, சங்கல்பம் செய்து பூஜைகள் முடித்து கங்கைக்கு ஆரத்தி எடுக்க வைத்தார்கள்….. மனதுக்கு மிகவும் இதமான சூழலாக அமைந்தது அந்த நிகழ்வு. ஆரத்தி எடுத்த பின்னர் அங்கே படித்துறையில் அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து கங்கை நதியின் ஒட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். மனதுக்குள் அப்படி ஒரு அமைதி…… அப்படியே அங்கேயே அமர்ந்து கொண்டு இருக்கலாம் என்று தோன்றியது……. நிதர்சனம், மணக் கண் முன்னே தெரிய அங்கிருந்து அனைவருடனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அது ஒரு நீண்ட நடைப் பயணமாக அமைந்தது.
கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 1
வருடத்தில் பாதிக்கு மேல், அதாவது குளிர் காலத்தில் (தீபாவளிக்கு அடுத்த நாள் பத்ரிநாத் கோயில் மூடப்பட்டு அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தின் கடைசியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் கோவில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். இங்கே அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்படி கோவில் திறப்பதை கப்பாட் திறந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த வருடம் கோவில் மீண்டும் தரிசனத்திற்காக திறந்தார்கள் என்பதால் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் செல்லும் பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஹரித்வார் நகரிலிருந்து பத்ரிநாத் கோயில் வரை செல்ல சாலை வசதி உண்டு. தொலைவு சற்றேறக்குறைய 320 கிலோ மீட்டர். ஹரித்வார் நகரின் பேருந்து நிலையத்தின் வாயிலுக்கு வெளியே பேருந்துகள் கிடைக்கும். இந்த பேருந்துகள் அனைத்துமே தனியார் வாகனங்கள் தான். TGMOC LTD (Tehri Garhwal Motors Owners Corporation Limited என்கிற கூட்டமைப்பு தான் இந்த பேருந்துகளை இயக்குகிறது. காலை வேளையில் முடிந்தவரை பத்ரிநாத் வரை செல்லும் பயணிகளை மட்டுமே பேருந்தில் ஏற்றிக் கொள்கிறார்கள்
ஐபிஎல் கதைகள் – 2
அம்பானி ஏலத்தில் எடுத்த மும்பை அணிக்கு என்ன பெயர் வைப்பார்கள் என பெரிய ஆர்வம் இருந்தது, சச்சினும் அந்த அணியின் ஐகான் வீரராக இருந்தது அந்த ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது. கடைசியில் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் என்ற பெயரை வெளியிட்டதும் சப்பென்று ஆகிவிட்டது. இது உள்ளூர் போட்டி, இங்கு ஏன் இந்தியன் என்ற பெயர்? நீங்க மட்டும்தான் இந்தியனா, எல்லா அணியும் இந்தியன்தானே, உங்கள் அணியில் வெளினாட்டு வீரர்கள் ஆடுவார்கள், பெயர் மட்டும் இந்தியனா ? என்றெல்லாம் மக்கள் கிண்டலடித்தார்கள். அப்படி சுவாரசியமற்ற பெயராக இருந்தது பின்னர் பெரிய பிராண்டாக வளர்ந்துவிட்டது.
ஐபிஎல் கதைகள் – 1
இந்த ஐகான் ப்ளேயர்கள் அந்தந்த அணியின் இயல்பான தலைமையுமாவார்கள் என்பதுதான் ஏற்பாடு. அதனால் ஆறு அணிகளுக்கு கேப்டன்கள் தன்னாலே அமைந்துவிட்டார்கள், ஆனால் சென்னை, ராஜஸ்தான் இருவருக்கும் பொது ஏலம் சென்றுதான் கேப்டன்களை தேர்ந்தெடுகவேண்டிய கட்டாயம். சென்னை அணி குறிப்பார்த்து காத்திருந்தது, தோனி பெயர் வந்ததும் தூக்கிவிட்டார்கள். கிட்டதட்ட எல்லா அணிகளும் தீவிரமாக போட்டியிட்டன தோனியை எடுக்க, கடைசியில் அந்த ஏலத்தின் அதிகப்பட்ச தொகையான 6.50 கோடிக்கு தோனியை சென்னை தட்டி தூக்கியது.
அழியாத மனக்கோலங்கள் – இறுதி பகுதி
சின்ன வயசிலிருந்தே என்னைத் தொடர்ந்து வரும் ஒரு பழக்கம் இருப்பதை இந்த சமயத்தில் உணர்கிறேன். தெளிவாக காரண காரியங்களை விளக்கி யாராவது எது குறித்தும் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பழக்கம். நானாக என் அனுபவத்தில் அது சரியில்லை என்று உணர்கிற வரை அந்த பழக்கம் என்னுள் பதுங்கியிருக்கும்
அழியாத மனக்கோலங்கள் – 14
இலங்கை ‘கதம்பம்’ பத்திரிகை ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’ என்ற போட்டியை நடத்தியது என்றால் குமுதம் ‘எனக்குப் பிடித்த நாவல்’ என்ற போட்டி ஒன்றை நடத்தியது. அந்தப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரைகளில் ஒன்றாக எனது கட்டுரை “அழியாத மனக்கோலங்கள் – 14”
Chat Lock – Whatsapp
Chat Lock என்ற புதிய ஒரு ஆப்ஷனை புதிதாய் அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட உரையாடல்கள் இருக்கும். அது அவர்கள் தொழில் ரகசியங்கள் அல்லது மிக தனிப்பட்ட உரையாடல்கள் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த சாட் விஷயங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என அவர்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட அரட்டைகளை எப்படி லாக் செய்வது என பார்ப்போம்.
அழியாத மனக்கோலங்கள் – 13
அன்று இரவு அசந்து தூங்கினாலும் சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். எழுந்து பல் விளக்கி காலைக்கடன் முடித்து குளித்து தலை வாரிக் கொண்டிருந்த பொழுது சின்னசாமி உள்ளே நுழைந்தார். “நல்லாத் தூங்கினீங்களா, சார்?” என்றார். “நல்ல “அழியாத மனக்கோலங்கள் – 13”